செய்திகள்

மெலட்டூர் அருகே சுவர் இடிந்து பெண் பலி- அமைச்சர் ஆறுதல்

Published On 2018-11-17 10:14 GMT   |   Update On 2018-11-17 10:14 GMT
மெலட்டூர் அருகே புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிற்கு சென்று உறவினருக்கு ஆறுதல் கூறினார்.

மெலட்டூர்:

பாபநாசம் தாலுக்கா கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணுகுடி தோட்டம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னையன் இவரது மனைவி சாரதாம்பாள் (வயது 70) நேற்று இரவு தனது குடிசை வீட்டில் உறங்கி கொண்டிருந்த அவர் மீது புயல் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் சாரதாம்பாள் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறி நிதி உதவி வழங்கினர். பாபநாசம் தாசில்தார் மாணிக்கராஜ், துணை தாசில்தார் தர்மராஜ். மெலட்டூர் சரக வருவாய் ஆய்வாளர் கலையரசி உள்பட வருவாய் துறையினர் உடன் சென்றனர்.

Tags:    

Similar News