செய்திகள்

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும்: விஜயபாஸ்கர்

Published On 2018-11-17 02:07 GMT   |   Update On 2018-11-17 02:09 GMT
புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் மின்சாரம் வர ஒருவாரமாகும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளர். #GajaCyclone #Gaja #Vijayabaskar
தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் ‘கஜா’ புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது அப்பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ‘கஜா’ புயல் கரை கடந்ததையொட்டி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 3 மாவட்டங்களில் மின் பாதிப்பு மற்றும் சேதங்கள் அதிகளவில் இருந்தது.



புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. வெளிமாவட்டங்களை சேர்ந்த 500 பணியாளர்களை கொண்டு சீரமைப்பு மற்றும் மின்சார பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை நகர் பகுதியில் சீரமைப்பு பணிகளை முடித்து இன்றைக்குள் மின்சாரம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார். #GajaCyclone #Gaja #Vijayabaskar
Tags:    

Similar News