செய்திகள்

தொப்பூர் அருகே இளம்பெண் மாயம்

Published On 2018-11-15 17:18 GMT   |   Update On 2018-11-15 17:18 GMT
தொப்பூர் அருகே இளம்பெண் மாயமானது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே தண்டுகாரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மனைவி கவிதா (வயது 25). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் கவிதா சம்பவத்தன்று தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு வீட்டை வெளியே சென்றார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீடு திரும்பி வரவில்லை. உடனே பதறிபோன அவரது கணவர் மணிகண்டன் கவிதாவை பல இடங்களில் தேடிபார்த்தார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்காததால் கவிதா மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து மணிகண்டன் தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News