செய்திகள்

குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-11-14 11:03 GMT   |   Update On 2018-11-14 11:03 GMT
குடும்ப தகராறில் மனைவி கோபித்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

மரக்காணம் அருகே முகையூர் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேலு (வயது 23). இவர், கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு பூத்துறை கிராமத்தை சேர்ந்த சங்கீதா என்பவரின் மகள் ரபீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 1½ வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜிப்மரில் தனியார் கேண்டீனில் தொழிலாளியாக வேலை செய்து வந்த சக்திவேலு வேலைக்கு சென்று வர வசதியாக புதுவை காமராஜர் சாலையில் ஒரு வாடகை வீட்டில் மனைவி- குழந்தையுடன் வசித்து வந்தார்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

அதுபோல் நேற்று முன் தினம் அவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் ரபீதா கணவனுடன் கோபித்து கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி கோபித்து சென்றதால் மனவேதனை அடைந்த சக்திவேலு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவர் வீட்டில் மனைவியின் சேலையால் மின் விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

நேற்று காலை கேண்டீனுக்கு சக்திவேலு வேலைக்கு வராததால் கேண்டீன் உரிமையாளர் சுந்தர்ராஜ் சந்தேகம் அடைந்து சக்திவேலுவின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு சக்திவேலு தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து சக்திவேலுவை மீட்டு ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சக்திவேலு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன், உதவி சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News