செய்திகள்
சிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலி
சிங்காநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிங்காநல்லூர்:
சிங்காநல்லூர் ரெயில்வே கேட் அருகே உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம் மிதப்பதாக சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கிணற்றில் பிணமாக மிதந்தவர் இருகூர் சின்னியம்பாளையம் ரோட்டில் உள்ள மாணிக்கம் நகரில் வசித்து வந்த சந்திரசேகர் (வயது 70) என்பதும், மனைவி இறந்து துக்கத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று வீட்டில் இருந்து வெளியில் சென்ற அவர் குடிபோதையில் கிணற்றில் தவறி விழுந்து இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.