செய்திகள்

திருப்பத்தூர் அருகே சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2018-11-10 17:23 GMT   |   Update On 2018-11-10 17:23 GMT
திருப்பத்தூர் அருகே சாராயம் விற்பனை செய்து வந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் அருகே உள்ள முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28), கோதணடராமன் (22) இவர்கள் அந்த பகுதியில் சாராயம் விற்பனை செய்து வந்தனர். இது தொடர்பாக திருப்பத்தூர் கலால் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலெட்சுமி 2 பேரையும் கைது செய்தார்.

தொடர்ந்த சாராய விற்பனை செய்த 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிந்துரை செய்தார்.

அதனை ஏற்ற கலெக்டர் இருவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News