செய்திகள்

ஆலங்குடி அருகே மனைவி இறந்த சோகத்தில் கணவன் தற்கொலை

Published On 2018-11-09 13:16 GMT   |   Update On 2018-11-09 13:16 GMT
ஆலங்குடி அருகே மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள குப்பகுடியைச்  சேர்ந்தவர் குணபாலன் ( வயது 43). இவருக்கும் இவரது மனைவி ஜெயபாரதி என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ஜெயபாரதி கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் எலிமருந்தை சாப்பிட்டு இறந்தார். 

மனைவி இறந்த துக்கத்தில் குணபாலன் சோகத்துடன் காணப்பட்டு வந்தார். இந்நிலையில், குணபாலன் கடந்த 7-ந்தேதி எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆலங்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News