செய்திகள்

பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

Published On 2018-11-08 16:27 GMT   |   Update On 2018-11-08 16:27 GMT
திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை ரெயில்வே போலீசார் வழங்கினர்.
திருவாரூர்:

திருவாரூர் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பான பயணம் குறித்து பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ரெயில்வே போலீசார் துண்டு பிரசுரங்கள் நேற்று வழங்கினர். நிகழ்ச்சிக்கு ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து எர்ணாகுளத்தில் இருந்து காரைக்கால் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினர். அப்போது ஒலி பெருக்கி மூலம் பாதுகாப்பான பயணம் குறித்து விழப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

இதுகுறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதிர்குமார் கூறுகையில்,

பயணிகள் உடைமைகளை பாதுகாப்பாக இருக்கையின் கீழ் வளையத்தில் பூட்டி வைக்க வேண்டும். ஜன்னல் அருகில் நகைகள் வெளியில் தெரியும்படி அமரக்கூடாது. கேட்பாரற்று கிடக்கும் பொருட்களை எக்காரணம் கொண்டும் தொடக்கூடாது. இதுபற்றி ரெயில்வே போலீசாருக்கு, இலவச பாதுகாப்பு தொடர்பு எண்ணான 182-க்கு தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும். ரெயில் பயணத்தின் போது அடையாளம் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவு பொருட்களை வாங்கி சாப்பிட கூடாது என்று கூறினார். 
Tags:    

Similar News