செய்திகள்

புதுக்கோட்டையில் தனியார்துறை சார்பில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

Published On 2018-11-08 11:32 GMT   |   Update On 2018-11-08 11:32 GMT
புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கணேஷ் தெரிவித்ததாவது. புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலை வாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 09.11.2018 வெள்ளிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இம்முகாமில் பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இந்த தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை கல்வித் தகுதிகளையுடைய இளைஞர்கள் பங்கேற்று பயனடைய வேண்டும் என அவர் கூறினார்.
Tags:    

Similar News