செய்திகள்

செய்யாறு அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2018-11-08 10:18 GMT   |   Update On 2018-11-08 10:18 GMT
செய்யாறு அருகே இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள எச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 30). இவரது மனைவி திவ்யா (22). இவர்களுக்கு திருமணமாகி 3 வருடங்களாகிறது. தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

ஜெயபாலுக்கும் திவ்யாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் தகராறு ஏற்படவே மனமுடைந்த திவ்யா வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News