செய்திகள்
குற்றாலம் அருகே தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை
குற்றாலம் அருகே மது குடித்து விட்டு வந்த வாலிபரை உறவினர்கள் சத்தம் போட்டதால் மனம் உடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:
குற்றாலம் அருகே உள்ள வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது34). இவர் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால், மனைவி பரமகல்யாணி மற்றும் உறவினர்கள் சத்தம் போட்டனர்.
இதில் மனம் உடைந்த கண்ணன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.