செய்திகள்
கோடம்பாக்கத்தில் 2 வீடுகளில் 70 பவுன் கொள்ளை
கோடம்பாக்கத்தில் 2 வீடுகளில் 70 பவுன் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை:
கோடம்பாக்கத்தில் ரங்கநாதபுரத்தில் ரகுகுமார் என்பவது வீட்டில் 45 பவுன் நகை மற்றும் 300 கிராம் வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இதேபோல கோடம்பாக்கம் ரங்கராஜபுரத்தில் மதுமதி என்ற ஆசிரியர் வீட்டில் 25 பவுன் தங்க நகைகளும், கொள்ளையடிக்கப்பட்டன. தியாகராஜன் வீட்டில் ½ கிலோ வெள்ளி பொருட்களும் திருடப்பட்டுள்ளன.