செய்திகள்
பேரூர் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது
பேரூர் அருகே கஞ்சா விற்ற முதியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை பேரூர் அய்யப்பன் கோவில் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக பேரூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த செட்டி வீதியை சேர்ந்த ரவி என்கிற யமகா ரவி (வயது 55) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2 கிலோ கஞ்சா, ரூ. 23 ஆயிரம் பணம், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.