செய்திகள்

எண்ணூரில் கண்டெய்னர் லாரி மோதி அதிகாரி பலி

Published On 2018-11-03 08:45 GMT   |   Update On 2018-11-03 08:45 GMT
எண்ணூரில் கண்டெய்னர் லாரி மோதி அதிகாரி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர்:

மயிலாப்பூரை சேர்ந்தவர் ரவிக்குமார். இவர் திருவொற்றியூர் விம்கோ நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

எண்ணூர் அருகே அப்பர்சாமி கோவில் அருகே சென்ற போது கண்டெய்னர் லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் ரவிக் குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags:    

Similar News