செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை
ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து பருவ மழை பெய்து வருகிறது. #Rain
ஈரோடு:
வடகிழக்கு பருவமழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. ஈரோட்டிலும் கடந்த 2 நாட்களாக மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது.
நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது.
டி.என்.பாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பகுதியில் அதிகபட்சமாக 30 மி.மீட்டர் மழை பெய்தது.
மேலும் பவானிசாகர், சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, பவானி உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகயிலும் மிதமான மழை பெய்தது.
இந்த மழையால் வெப்பம் அடியோடு தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.
வனப்பகுதியான தாளவாடியில் நேற்று முன்தினம் நல்ல வெயில் அடித்தது. அதே சமயம் இரவில் சாரல்மழை தூறிக்கொண்டிந்தது. தாளவாடி பகுதியில் 18 மி.மீ. மழை பெய்தது.
ஈரோடு மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மழைதூறிக்கொண்டே இருந்தது.