செய்திகள்

ஆம்பூர் அருகே பஸ் டெப்போவில் திருட்டு- 6 பேர் கைது

Published On 2018-11-02 11:18 GMT   |   Update On 2018-11-02 11:18 GMT
ஆம்பூர் அருகே பஸ் டெப்போவில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆம்பூர்:

ஆலங்காயம் பகுதியை சேர்ந்தவர் சபரேசன் (வயது 48). தனியார் பஸ் உரிமையாளர். இவர் ஆம்பூர் விண்ணமங்கலம் அருகே பஸ் டெப்போ (மெக்கானிக் செட்) வைத்துள்ளார்.

சம்பவத்தன்று சபரேசன் வேலையை முடித்து விட்டு பஸ் டெப்போவை பூட்டிச் சென்றார். நேற்று முன்தினம் காலை டெப்போவை திறக்க வந்த போது டெப்போவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சபரேசன் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது டெப்போவில் இருந்த பேட்ரி, ஜாக்கி உள்ளிட்ட ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சபரேசன் ஆம்பூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் விண்ணமங்கலம் பகுதியை சேர்ந்த பூவரசன் (வயது 32). சுரேஷ்குமார் (28). பிரசன்னா (27). சுரேஷ் (32). கார்த்தி (24). தினேஷ்கமார் (28) உள்பட 6 பேரை கைது செய்தனர்.

Tags:    

Similar News