செய்திகள்

ஈரோடு வெண்டிப்பாளையத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு

Published On 2018-10-29 12:23 GMT   |   Update On 2018-10-29 12:23 GMT
மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் 50க்கும் மேற்பட்ட மக்கள் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர்.

ஈரோடு:

ஈரோடு வெண்டிபாளையம் மணலி கந்தசாமி வீதியில் புதிதாக டாஸ்மாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக அப்போதைய கலெக்டர் பிரபாகரிடமும் மனு கொடுத்தனர்.

இந்நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு திடீரென அந்த டாஸ்மாக்கடை திறக் கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மக்கள் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தனர்.

அதன்படி மணலி கந்தசாமி வீதியில் இன்று 50க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது,

எங்கள் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே 500 மீட்டர் தொலைவில் மதுக்கடை உள்ளது.

இந்நிலையில் திடீரென இங்கு மதுக்கடையைதிறந்துள்ளனர் இந்த மதுக்கடை ஒட்டியே குடியிருப்பு பகுதிகள் உள்ளன.

இந்த மதுக்கடை திறந்ததால் இரவில்இப்பகுதியில் பெண்கள் நடந்து செல்வதற்கும் பயப்படுகிறார்கள். மேலும் 200 மீட்டர் தொலைவில் ஒரு கோயில் உள்ளது. இதனால் கோவில் செல்வதற்கும் பயப்படுகிறார்கள் எனவே எங்களது கோரிக்கையை அரசுக்கு தெரிவிக்கும் வகையில் இன்று கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்துகிறோம்.

தொடர்ந்து இன்று மதியம் 2 மணியளவில் எங்கள் பகுதி சேர்ந்த மக்கள் கலெக்டர் கதிரவனை சந்தித்து வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைக்க போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவர் அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News