செய்திகள்
சாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகை திருட்டு
சாத்தூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 18¾ பவுன் தங்க நகை திருடி சென்றது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்குராஜ் மனைவி நிர்மலாதேவி(வயது 34). இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18¾ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் அப்பயநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சாத்தூர் அருகே சிறுகுளம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்குராஜ் மனைவி நிர்மலாதேவி(வயது 34). இவர் வீட்டை பூட்டிவிட்டு அதே கிராமத்தில் உள்ள அவரது சித்தப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கபட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18¾ பவுன் நகை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் அப்பயநாயக்கன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.