செய்திகள்

வேப்பம்பட்டு அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை

Published On 2018-10-28 06:42 GMT   |   Update On 2018-10-28 06:42 GMT
வேப்பம்பட்டு அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செவ்வாப்பேட்டை:

வேப்பம்பட்டு, அருண் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜி. இவரது மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்ள ராஜி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று இரவு திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகன் விசாரித்து வருகிறார்.

Tags:    

Similar News