செய்திகள்
வேப்பம்பட்டு அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளை
வேப்பம்பட்டு அருகே வீட்டு பூட்டை உடைத்து நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செவ்வாப்பேட்டை:
வேப்பம்பட்டு, அருண் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ராஜி. இவரது மருமகளின் வளைகாப்பு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்தது. இதில் கலந்துகொள்ள ராஜி வீட்டை பூட்டிவிட்டு சென்றார். நேற்று இரவு திரும்பி வந்தபோது வீட்டு பூட்டு உடைந்து கிடந்தது. பீரோவில் இருந்த 7 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து செவ்வாப்பேட்டை இன்ஸ்பெக்டர் முருகன் விசாரித்து வருகிறார்.