செய்திகள்

திண்டல் அடுக்குமாடி குடியிருப்பில் நகை திருடிய வாலிபர் கைது

Published On 2018-10-27 11:13 GMT   |   Update On 2018-10-27 11:13 GMT
திண்டல் அடுக்குமாடி குடியிருப்பில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு:

ஈரோடு திண்டல் அடுத்த காரபாறைப் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் திண்டல் கே.எஸ் நகரில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவரது மகன் சுதாகர் (வயது 19).

சண்முகம் தான் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் ரூம் எடுத்து தங்கி வந்தார். தந்தையை பார்க்க சுதாகர் அடிக்கடி ரூமிற்கு வருவது வழக்கம்.

சண்முகத்திடம் அடுக்கு மாடியில் வசித்து வருபவர்களின் வீட்டு சாவி இருந்தது. சம்பவத்தன்று சண்முகம் சாவியை ரூமில் வைத்து விட்டு வெளியே சென்று விட்டார்.

அப்போது அங்கு வந்த சுதாகர் அந்த சாவியை எடுத்து அடுக்கு மாடி குடியிருப்பில் ஒரு வீட்டின் கதவை திறந்தார். பிறகு அங்கு இருந்த 3 பவுன் நகையை திருடி சென்று விட்டார்.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சுதாகர் தான் அந்த வீட்டில் கொள்ளையடித்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து சுதாகர் கைது செய்யப்பட்டார்.

Tags:    

Similar News