செய்திகள்

அரூரில் அரசு பேருந்து ஓட்டுநரிடம் ரூ. 2 லட்சம் திருட்டு

Published On 2018-10-25 13:45 GMT   |   Update On 2018-10-25 13:45 GMT
அரசு பேருந்து ஓட்டுநர் வங்கியில் இருந்து லோன் வாங்கிய ரூ 2 லட்சம் பணத்தை மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்து இருந்தார். அந்த பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்துள்ள வீரப்பநாய்க் கன்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (47), இவர் அரசு பேருந்து ஓட்டுநராக அரூர் பணி மனையில் பணிபுரிந்து வருகிறார். 

காலை 11 மணியளவில் அரூர் பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பர்சனல் லோன் ரூ. 2 லட்சம் வாங்கி கொண்டு வங்கியின் முன்புறம் நிறுத்தியிருந்த அவருடைய மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்துவிட்டு அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்க்கு சென்றுவந்து பார்த்த போது, மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணம் ரூ. 2 லட்சத்தை காணவில்லை. மர்ம நபர்கள் இதனை நோட்டமிட்டு திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அரூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மக்கள் நெரிசல் மிகுந்த பகுதியில் வண்டியில் வைத்த பணம் 2 நிமிடத்தில் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News