செய்திகள்

கோபி அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை

Published On 2018-10-25 11:39 GMT   |   Update On 2018-10-25 11:39 GMT
ஈரோடு மாவட்டம் கோபி அருகே வீட்டுக்கு மனைவி வர மறுத்ததால் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:

கோபியை அடுத்த அத்தாணி, பெருமாள் பாளையம், சில்லாங்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் குருசாமி(வயது60). விவசாயி. இவரது மனைவி முருகாய்யாள். இவரது மகள் தமிழரசி. திருமணமாகி கணவருடன்ஈரோடு, சூளையில் வசித்து வருகிறார்.

முருகாய்யாள் உடல்நலம் குறைவு காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சூளையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து விட்டார்.

இந்நிலையில் கடந்த 22-ந்தேதி குருசாமி சூளையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்து மனைவி முருகாய்யாளை நமது வீட்டிற்கு செல்லலாம் என்று கூறினார். அதற்கு முருகாய்யாள் வர மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் குருசாமி அங்கிருந்து சென்று விட்டார். பின்னர் மது வாங்கி அதில் வி‌ஷம் கலந்து குடித்து வீட்டு மீண்டும் சூளையில் உள்ள மகள் வீட்டிற்கு வந்து தான் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முருகாய்யாள் தனது உறவினர்களுடன் குருசாமியை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி குருசாமி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News