செய்திகள்

சபரிமலையில் பெண்கள் அனுமதி: கேரள அரசுக்கு த.மா.கா. கண்டனம்

Published On 2018-10-25 09:58 GMT   |   Update On 2018-10-25 09:58 GMT
சபரிமலையில் வழிபாட்டு முறைக்கு மாறாக சென்ற பெண்களை கேரள அரசு ராஜமரியாதையோடு அழைத்துச்சென்றது ஏன்? என்று ஞானதேசிகன் கண்டனம் தெரிவித்துள்ளார். #Sabarimala #TamilMaanilaCongress
சென்னை:

த.மா.கா. துணைத்தலைவர் ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கேரள முதல்-அமைச்சர் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவது அரசின் கடமை என்று பேசி இருக்கிறார். சபரிமலைக்கு பெண்கள் போவதற்கான வாய்ப்பை உச்சநீதிமன்றம் தீர்ப்பின் மூலம் ஏற்படுத்திக் கொடுத்ததே தவிர கோவில் வழிபாட்டு முறைகளுக்கு மாறாக போகலாம் என்று சொல்லவில்லை.

மத வழக்கங்களில் வழிபாட்டில் இதில் சம்பந்தமில்லாத நபர்கள் பொது நல வழக்கு போடுவது ஏற்புடையதல்ல என்பதை ஏற்க மறுத்துள்ளார்கள். மறு ஆய்வில் இவைகளெல்லாம் கருத்தில் கொள்ளப்படும் என்று நம்புகிறேன்.

சபரிமலை என்பது சுற்றுலா தளம் அல்ல? கடவுள் நம்பிக்கை உள்ள ஐயப்பன் பக்தர்கள் போகிற இடம். முல்லை பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதியாமல் கேரள அரசு சட்டத்தின் மூலம் மாற்ற முனைந்தது. ஆனால் வழிபாட்டு முறைகளை மீறி சபரிமலை செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் சொல்லாதபோது இரண்டு பெண்களை ராஜமரியாதையோடு அழைத்து சென்றது ஏன்?

இவ்வாறு ஞானதேசிகன் கூறி உள்ளார். #Sabarimala #TamilMaanilaCongress
Tags:    

Similar News