செய்திகள்

பாலியல் ஆடியோ - அமைச்சர் ஜெயக்குமார் மீது மகளிர் ஆணையத்தில் புகார்

Published On 2018-10-23 06:34 GMT   |   Update On 2018-10-23 06:34 GMT
பாலியல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் மீது தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வக்கீல் சுரேஷ்பாபு புகார் மனு அளித்துள்ளார். #MinisterJayakumar #JayakumarAudio
சென்னை:

அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணுடன் போனில் பேசுவது போன்ற ஒரு ஆடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனது மகள் சிபாரிசுக்காக வந்தபோது கர்ப்பமாக்கி விட்டீர்களே என்று பெண் கேட்கிறார். அமைச்சர் ஜெயக்குமாரை போன்ற குரலில் பேசுபவர் நேரில் வாருங்கள் பேசிக் கொள்ளலாம் என்கிறார். வெவ்வேறு நாட்களில் 2 முறை அவர்கள் பேசியது போன்ற பாலியல் ஆடியோவுடன் பிறப்பு சான்றிதழ் ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் தந்தை என்கிற இடத்தில் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பாலியல் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனை தொடர்ந்து அமைச்சர் ஜெயக்குமார் பதவி விலக வேண்டும் என்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.



இந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் சார்பில் வக்கீல் சுரேஷ்பாபு புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு அமைச்சர் ஜெயக்குமாருக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே தன் மீதான புகாரை அமைச்சர் ஜெயக்குமார் மறுத்துள்ளார். #MinisterJayakumar #JayakumarAudio


Tags:    

Similar News