செய்திகள்
ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்.

ஒகேனக்கல்லுக்கு 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து

Published On 2018-10-23 04:21 GMT   |   Update On 2018-10-23 04:21 GMT
கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு இன்றும் வினாடிக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. #Hogenakkal
தருமபுரி:

கர்நாடக மாநிலம் காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இன்றும் வினாடிக்கு தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி மற்றும் காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர். பரிசல் சவாரி சென்று காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

மேலும் தொங்குபாலம், முதலை பண்ணை ஆகிய பகுதிக்கும் சென்று சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.  #Hogenakkal



Tags:    

Similar News