செய்திகள்

வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள்- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்

Published On 2018-10-22 16:34 GMT   |   Update On 2018-10-22 16:34 GMT
வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள் கட்டப்பட உள்ளதாகவும், அதற்கான பணிகள் 10 நாட்களில் தொடங்கும் என்றும் அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். #ministerrbudhayakumar

மதுரை:

மேலூர் அருகே உள்ள புலிப்பட்டியில் பெரியாறு பிரதான கால்வாய் உள்ளது. இங்கிருந்து கருங்காலக்குடி மற்றும் சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இதனை ஏற்று பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதகு களை திறந்து வைத்தார்.

பின்னர் அவர் கூறுகையில், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரிய புள்ளான், சிவகங்கை மாவட்ட அமைச்சர் பாஸ்கரன் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலூர் தொகுதிக்குட்பட்ட மேல வளவு, கச்சிராயன்பட்டி, வஞ்சிநகரம், கருங்காலக்குடி உள்ளிட்ட 8 கிராமங்களுக்கும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென் சிங்கம்புணரி, வடசிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டை உள்ளிட்ட 11 கிரா மங்களுக்கும் பாசன வசதி கிடைக்கும். 22 ஆயிரத்து 700 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றார்.

பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-

வைகை அணையில் மேலும் 2 தடுப்பணைகள் அமைக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கான பணிகள் 10 நாளில் தொடங்கும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் பிரதமர் மோடியை தனித்தனியாக சந்தித்து குறை கூறி வருவதாக தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார். அவர் ஒட்டு கேட்கும் வேலை செய்கிறாரா? அதில் ஈடுபட வேண்டாம். ஓட்டு கேட்கட்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் நடராஜன், எம்.எல். ஏ.க்கள் பெரியபுள்ளான், சரவணன், முன்னாள் எம். எல்.ஏ. தமிழரசன், முன் னாள் ஊராட்சி மன்ற மாவட்ட துணைத்தலைவர் ஜபார், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரியசாமி, ஒன்றிய செயலாளர்கள் பொன்னுச்சாமி, வெற்றி செழியன், மணிகண்டன் மற்றும் அன்புச்செல்வன், மேலூர் பெரியாறு ஒரு போக பாசன சங்கத் தலைவர் முருகன், பொதுப் பணித்துறை செயலாளர் சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerrbudhayakumar

Tags:    

Similar News