செய்திகள்

புளியந்தோப்பு அருகே 8 மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

Published On 2018-10-22 08:55 GMT   |   Update On 2018-10-22 08:55 GMT
புளியந்தோப்பு அருகே 8 மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பூர்:

புளியந்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம், டிக்காஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளை தள்ளிச் சென்ற ஒருவரை நிற்க சொன்னார். உடனே அவர் மோட்டார் சைக்கிளை போட்டு விட்டு தப்பி ஓடினார்.

அவரை பிடித்து விசாரித்த போது புளியந்தோப்பு அம்பேத்கார் நகரை சேர்ந்த ராபர்ட் கென்னடி என்பதும் மோட்டார் சைக்கிள் திருடி சென்றதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து 8 மோட்டர் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News