செய்திகள்

காவேரிபாக்கம் அருகே விபத்து - வாலிபர் பலி

Published On 2018-10-21 12:28 GMT   |   Update On 2018-10-21 12:30 GMT
காவேரிபாக்கம் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பனப்பாக்கம்:

குடியாத்தம் அசோக்நகரை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் கோபி (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

விடுமுறை காரணமாக கோபி சென்னையில் இருந்து நேற்றிரவு வீட்டிற்கு பைக்கில் வந்தார். காவேரிப்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயமடைந்த கோபி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். காவேரிபாக்கம் போலீசார் கோபி உடலை மீட்டு வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News