செய்திகள்

திருப்பத்தூர் அருகே வீட்டு முன்பு விளையாடிய 7 வயது சிறுமி கடத்தல்- வாலிபர் கைது

Published On 2018-10-20 12:09 GMT   |   Update On 2018-10-20 12:09 GMT
திருப்பத்தூர் அருகே சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்செவல்பட்டி விராமதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் மகாலட்சுமி (வயது 7). இவள் அங்குள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறாள்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மகாலட்சுமி வீட்டு முன்பு விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர், திடீரென்று சிறுமி மகா லட்சுமியை பைக்கில் ஏற்றி கடத்திச் சென்று விட்டார்.

இது குறித்து தந்தை ஆறுமுகம் கீழச்செவல்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

போலீஸ் விசாரணையில் குழந்தையை கடத்தியது புதுக்கோட்டை மாவட்டம், பொன்னேரியைச் சேர்ந்த சிங்கமுத்து மகன் ராமு (26) என்பது தெரியவந்தது.

இது குறித்து ராங்கியம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் ராமுவை கைது செய்தனர். அவர் எதற்காக சிறுமியை கடத்தினார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News