செய்திகள்

செய்யாறு அருகே வி‌ஷம் குடித்து மூதாட்டி பலி

Published On 2018-10-19 11:56 GMT   |   Update On 2018-10-19 12:09 GMT
செய்யாறு அருகே வி‌ஷம் குடித்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள கீழ்புதுபாக்கம் பகுதியை சேர்ந்தவர் வரதராஜன். இவரது மனைவி புஷ்பவதி (வயது 65). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனமுடைந்த புஷ்பவதி இன்று காலை வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட உறவினர்கள் புஷ்பவதியை மீட்டு குடியாத்தம் அரசு ஆபத்திரியில் கொண்டு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News