செய்திகள்

ராஜபாளையம் அருகே கட்டிட தொழிலாளி தவறி விழுந்து மரணம்

Published On 2018-10-17 08:01 GMT   |   Update On 2018-10-17 08:01 GMT
ராஜபாளையம் அருகே சாரம் சரிந்து விழுந்து கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே உள்ள அருள்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (வயது 31). இவர் கட்டிட தொழிலாளி.

சம்பவத்தன்று சுந்தரராஜபுரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார். சாரத்தில் ஏறி பணி செய்து கொண்டு இருந்த அவர் மதியம் சாப்பிடுவதற்காக கீழே இறங்கினார்.

அப்போது ஆபிரகாம் எதிர்பாராத விதமாக கால் இடறி சாரத்தில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சக தொழிலாளர்கள் மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு நிலைமை மோசமானதால் அபிரகாம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆபிரகாம் மனைவி புஷ்பவள்ளி சேத்தூர் புறக்காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் குமரவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News