செய்திகள்

ஜாபர்கான்பேட்டையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளை

Published On 2018-10-16 09:25 GMT   |   Update On 2018-10-16 09:25 GMT
ஜாபர்கான்பேட்டையில் டாஸ்மாக் கடையில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை ஜாபர்கான் பேட்டையில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடை விற்பனையாளர் மதன் மோகன் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News