செய்திகள்
சீர்காழி அருகே கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்கள் கைது
சீர்காழி அருகே போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கோவில் உண்டியலில் பணம் திருடிய 2 வாலிபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 1 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் திருவெண்காடு அடுத்த சிறுவாலி பகுதியில் இன்ஸ் பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார் சந்தேகமடைந்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் 2 பேரும் சிறுவாலி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் மற்றும் பாம்புளியம்மன் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடியது தெரியவந்தது. மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் அதே பகுதியை சேர்ந்த முரளி (வயது 32), மற்றும் அன்புத்தம்பி (23) என தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு கிலோ வெள்ளி பொருட்கள், மற்றும் 2500 ரொக்க பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர்.