செய்திகள்

கேகே நகரில் அறநிலையத்துறை அதிகாரி மீது தாக்குதல்- வியாபாரி கைது

Published On 2018-10-15 15:01 IST   |   Update On 2018-10-15 15:01:00 IST
அறநிலையத்துறை திட்டக்குழு இயக்குனர் மீது தாக்குதல் நடத்திய வியாபாரியை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
போரூர்:

திருமங்கலம் வெல்கம் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இந்து அறநிலையத்துறையில் திட்டக்குழு இயக்குனராக உள்ளார். இவர் கே.கே. நகர் பாரதிதாசன் காலனி 60 அடி சாலையில் பழைய பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் சம்சு முகமது இப்ராகிம் என்பவரது கடைக்கு வந்தார். அங்கு மரத்தால் ஆன பூஜை அறை ஒன்றை வாங்குவதற்காக விலை கேட்டார். அப்போது காமராஜிக்கும் சம்சு இப்ராகிமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த சம்சு இப்ராகிம் திடீரென காமராஜை கன்னத்தில் ஓங்கி அடித்தார் இதுகுறித்து காமராஜ் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்சு முகமது இப்ராகிம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News