செய்திகள்

ஆவடி அருகே வாலிபர் படுகொலை

Published On 2018-10-15 09:21 GMT   |   Update On 2018-10-15 09:21 GMT
ஆவடி அருகே வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder

சென்னை:

சென்னை ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியில் சென்னை வண்டலூர்- மீஞ்சூர் 400 அடி தேசிய நெடுஞ்சாலையோரமாக வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் உடலை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. அங்கு மது அருந்த வந்தபோது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தலையில் கல்லை போட்டு கொலை செய்ததால் முக அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலையாளி யார்? என்பது குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News