செய்திகள்

ராமாபுரத்தில் மாநகராட்சி கழிவறை மேற்கூரை உடைந்து முதியவர் பலி

Published On 2018-10-15 12:17 IST   |   Update On 2018-10-15 12:17:00 IST
ராமாபுரத்தில் மாநகராட்சி கழிவறை மேற்கூரை உடைந்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போரூர்:

சென்னை ராமாபுரம் பாரதி சாலையில் மாநகராட்சி அலுவலகம் அருகில் இலவச பொது கழிப்பிடம் உள்ளது.

இன்று காலை 7.30மணி அளவில் அவ்வழியே சென்ற பொதுமக்கள் கழிவறையின் மேலிருந்த மேற்கூரை இடிந்து மேலே இருந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டியும் உடைந்து கிடந்ததை பார்த்தனர்.

உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது கழிவறை உள்ளே 65வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் நசுங்கிய நிலையில் இறந்து கிடந்தார். உடனடியாக இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் சம்பவ இடத்திற்கு விரைந்து இறந்தவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

விசாரணையில் நேற்று மாலையே விபத்து நடந்திருக்கலாம் என்றும் இறந்த முதியவர் ராமாபுரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த நாடு என்கிற ராமலிங்கம் என்பதும் தெரியவந்தது.

Tags:    

Similar News