செய்திகள்

ரேசன் கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் 15-ந் தேதி தொடங்குகிறது

Published On 2018-10-13 17:16 IST   |   Update On 2018-10-13 17:16:00 IST
நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

பேரையூர்:

நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

இது குறித்த ஆலோ சனைக் கூட்டம் மாநில துணைத் தலைவர் செல்லத் துரை தலைமையில் நடை பெற்றது.

பின்னர் முன்னாள் மாநிலத்தலைவர் பால் பாண்டி கூறியதாவது:-

ஊதிய மாற்றம், அரசு பணியாளர்களுக்கு வழங்குவதை போல அகவிலைப்படி வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவ காப்பீட்டுத்திட்டம், மாற்றுத் திறனாளிக்கு படி ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2,500 ஆக உயர்த்துதல் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார்.

தீபாவளி முன்பணமாக மாநில அரசு ரூபாய் 5,000 வழங்கி வருகிறது. மற்ற மாநிலங்கள் முன்பணமாக ரூபாய் 15 ஆயிரம் வழங்கு வதால் தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர் களுக்கு மற்ற மாநிலங்களை போல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாநில நிர்வாகிகள் பால முருகன், அருணாச்சலம், சிவக்குமார் ராமச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News