செய்திகள்

கொரட்டூரில் காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர்

Published On 2018-10-12 11:21 GMT   |   Update On 2018-10-12 11:21 GMT
சென்னை கொரட்டூர் பகுதியில் காதலிக்காக மோட்டார் சைக்கிள்களை திருடிய வாலிபர் சிக்கினார்.

சென்னை:

சென்னை கொரட்டூர் பகுதியில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்கள் தொடர்ந்து திருட்டு போனது. இது தொடர்பாக கொரட்டூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தன் மற்றும் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் என்ற வாலிபர் சிக்கினார்.

திருமங்கலம் என்.வி.எம். நகரை சேர்ந்த அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். மணிகண்டன் விலை உயர்ந்த 3 மோட்டார் சைக்கிள்களை திருடியிருப்பது தெரியவந்தது. ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களும் ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்பு கொண்டவையாகும்.

மணிகண்டனை கைது செய்த போலீசார் புதிய மோட்டார் சைக்கிள்களை திருடியது ஏன்? என்பது பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் ஒரு பெண்ணை காதலித்து வருவதாகவும், அவருடன் ஒன்றாக ஊர் சுற்றுவதற்காகவே புதிது புதிதாக மோட்டார் சைக்கிள்களை திருடினேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News