செய்திகள்

கடலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் மரணம்

Published On 2018-10-11 13:32 IST   |   Update On 2018-10-11 13:32:00 IST
கடலூர் சிறையில் தற்கொலைக்கு முயன்ற கைதி ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ராயபுரம்:

மரக்காணம் அருகே உள்ள நடுக்குப்பம், சின்ன காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு சாராயம் விற்ற வழக்கில் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி சிறையில் இருந்த முருகன் திடீரென தனது உள்ளாடையால் கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்ட சிறை அதிகாரிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனியின்றி இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News