செய்திகள்

ஆசிட் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-10-08 12:25 GMT   |   Update On 2018-10-08 12:25 GMT
கோவையில் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ராஜன். இவரது மகன் ஷாஜூ (வயது 26). தங்க நகை தொழிலாளி. இவர் கோவை பூமார்க்கெட்டில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தங்கநகை பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று இரவு பட்டறையில் வேலை செய்து கொண்டு இருந்த ஷாஜூ அங்கு இருந்த ஆசிட்டை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக ஷாஜூவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஷாஜூ இன்று காலை பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆர்.எஸ். புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஷாஜூ தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News