செய்திகள்

மாடு மேய்த்து கம்ப்யூட்டர் படிக்க வைத்த மனைவி விவாகரத்து கேட்டதால் வாலிபர் தற்கொலை

Published On 2018-10-05 10:51 GMT   |   Update On 2018-10-05 10:51 GMT
கோத்தகிரி அருகே மாடு மேய்த்து கம்யூட்டர் படிக்க வைத்த மனைவி விவாகரத்து கேட்ட வேதனையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தர்மோனா பகுதியை சேர்ந்தவர் டேனியல் (வயது 32). மாடு வளர்த்து வருகிறார். இவருக்கும் மந்தாடா பகுதியை சேர்ந்த ‌ஷர்மிளா (27) என்பவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

இந்நிலையில் டேனியல் மாடு வளர்த்து பால் கறந்து மனைவியை கம்ப்பூட்டர் கோர்ஸ் படிக்க வைத்தார். கம்ப்யூட்டர் படிப்பு முடிந்ததும் நீங்கள் மாடு மேய்க்கிறீர்கள், நான் கம்ப்யூட்டர் படித்து விட்டேன். எப்படி பொருந்தும் என்று ‌ஷர்மிளா கூறினார். இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ‌ஷர்மிளா கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கிருந்து விவாகரத்து கேட்டு கணவருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இது குறித்தான வழக்கு விசாரணை கோத்தகிரி கோர்ட்டில் கடந்த மாதம் தொடங்கியது. இன்று (5-ந்தேதி) மீண்டும் விசாரிக்க இருந்தது.

இந்நிலையில் மனைவி விவாகரத்து கேட்ட அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்த டேனியல் நேற்று இரவு வீட்டில் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தார். வெகுநேரம் ஆன பின்னர் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது டேனியல் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News