செய்திகள்

ஆதாருடன் வாக்காளர் அட்டையை இணைக்க கோரி வழக்கு- மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு நோட்டீசு

Published On 2018-10-05 08:03 GMT   |   Update On 2018-10-05 08:03 GMT
போலி வாக்காளர்களை களைய ஆதாருடன், வாக்காளர் அட்டையை இணைக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு, சென்னை ஐகோர்ட்டு நோட்டீசு அனுப்பியுள்ளது. #Aadharcard #votercard #chennaihighcourt

சென்னை:

போலி வாக்காளர்களை களையும் வகையிலும், தேர்தல் முறைகேடுகளை தடுக்கவும் வாக்காளர் அடையாள அட்டையை, ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட வேண்டும்.

ஆதார் அட்டையை இணைக்கும் வரை சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், பி.டி.ஆஷா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வக்கீல், வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தது. சமீபத்திய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிற்கு பிறகு அந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டது. அதேநேரம், இது சம்பந்தமாக மத்திய அரசு தான் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறினார்.

இதையடுத்து இந்த வழக்கிற்கு விரிவான பதில் மனுவை மத்திய அரசும், ஆதார் ஆணையமும் 3 வாரத்துக்குள் தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Aadharcard #votercard #chennaihighcourt 

Tags:    

Similar News