செய்திகள்

காஞ்சீபுரம் அருகே குடோனில் பதுக்கிய 3½டன் குட்கா பறிமுதல் - ஒருவர் கைது

Published On 2018-10-05 06:28 GMT   |   Update On 2018-10-05 06:28 GMT
காஞ்சீபுரம் அருகே குடோனில் 3½ டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த பாலுசெட்டிச்சத்திரம் அருகே உள்ள துலுக்கந்தண்டலம் பகுதியில் குடோனில் குட்கா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தனிப் படை போலீசுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்கள் மூட்டை, மூட்டையாக அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

மொத்தம் 3½ டன் புகையிலை இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். குடோன் உரிமையாளர் திருப்பதி என்பவர் தலை மறைவாகிவிட்டார். அவரது சகோதரன் மோகனை கைது செய்தனர்.

குட்கா கிடைத்தது எப்படி? எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது. யார் மூலம் சப்ளை செய்யப்படுகிறது என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குடோனில் 3½ டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News