செய்திகள்

திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்

Published On 2018-10-01 12:23 GMT   |   Update On 2018-10-01 12:23 GMT
திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.

திருப்பத்தூர்:

திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டு அவ்வைநகரில் பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டது. இன்று வழக்கமாக வழங்கப்படும் லாரி குடிநீரும் வழங்கவில்லை.

இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு உடனே லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News