செய்திகள்

மனைவியை கொன்றதாக கைதான கூலி தொழிலாளி சேலம் சிறையில் அடைப்பு

Published On 2018-09-30 21:22 IST   |   Update On 2018-09-30 21:22:00 IST
தளி அருகே தகராறில் மனைவியை கொன்ற கூலி தொழிலாளி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளியை அடுத்த சின்னமத கொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி லட்சுமி (40).

கடந்த 24-ந்தேதி லட்சுமி சமைக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் மனைவியை அடித்து உள்ளார். இதனால் நிலை தடுமாறி விழுந்த லட்சுமியின் தலை கட்டிலின் முனையில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தளி இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குபதிவு செய்து நாகராஜை கைது செய்தார்.

பின்னர் அவர் தேன்கனிக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி மேகலா மைதிலி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதை தொடர்ந்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Tags:    

Similar News