செய்திகள்

தருமபுரி அருகே இன்ஸ்பெக்டர் திடீர் மரணம்

Published On 2018-09-29 17:07 GMT   |   Update On 2018-09-29 17:07 GMT
தருமபுரி அருகே திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.
தருமபுரி

தருமபுரி அடுத்துள்ள குப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன் (வயது 48). இவர் நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் சப்-டிவிசன் வாய்மேடு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு தென்றல் என்ற மனைவி உள்ளார். இவர் ஒசஅள்ளி புதூரில் உடற்கல்வி ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். தென்றல் வெண்ணாம் பட்டியில் உள்ள ஹவுசிங் போர்ட்டில்  குடியிருந்து வருகிறார்.

இந்த நிலையில் கண்ணையன் 5நாள் விடுமுறையில் சொந்த ஊரான தருமபுரிக்கு வந்தார். நேற்று இரவு ஹவுசிங்போர்ட்டில் உள்ள வீட்டில் அவர் இருந்தபோது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  உடனே அவரை உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கண்ணையன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

அவரது உடலை அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான குப்பூருக்கு உறவினர்கள் எடுத்து சென்றனர்.
Tags:    

Similar News