செய்திகள்

கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Published On 2018-09-28 20:39 GMT   |   Update On 2018-09-28 20:39 GMT
கிண்டி, மாம்பலம் ரெயில் நிலையத்தில் இன்று முதல் புதுச்சேரி எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. #PuducherryExpress #Gundi #Mambalam #SouthernRailway
சென்னை:

சென்னை பரங்கிமலை ரெயில் நிலைய விபத்துக்கு பின்னர் தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில் அதிவேக மின்சார ரெயில் சேவையை ரத்து செய்தது. இதனால் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் பயணிகளின் தேவைக்காக சென்னை எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலை சென்னை கடற்கரை ரெயில் நிலையம் வரை தெற்கு ரெயில்வே நீட்டித்தது.

இதற்கிடையே தெற்கு ரெயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* எழும்பூர்-புதுச்சேரி-எழும்பூர் எக்ஸ்பிரஸ்(வண்டி எண்:16115/16116), இன்று(சனிக்கிழமை) முதல் கிண்டி மற்றும் மாம்பலம் ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News