செய்திகள்

மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி - டிரைவர் கைது

Published On 2018-09-28 15:57 GMT   |   Update On 2018-09-28 15:57 GMT
மணல் கடத்தலை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை டிராக்டர் ஏற்றி கொல்ல முயற்சி செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி:

செஞ்சி அருகே அத்தியூரில் உள்ள ஏரியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக அனந்தபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அனந்தபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் அத்தியூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு டிராக்டரை போலீசார் வழிமறித்தனர். ஆனால் டிரைவர் நிறுத்தாமல் சப்-இன்ஸ்பெக்டர் பழனி மீது டிராக்டரை ஏற்றி கொல்ல முயன்றார். இதில் சுதாரித்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் விலகி உயிர் தப்பினார்.

இதையடுத்து போலீசார் அந்த டிராக்டரை மடக்கி, டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தச்சம்பட்டை சேர்ந்த செல்வகுமார் மகன் இளையராஜா (வயது 31) என்பதும், அத்தியூர் ஏரியில் இருந்து மணல் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News