செய்திகள்
கைது செய்யப்பட்ட குமார், தமிழ்செல்வி

மேஸ்திரி கொலையில் நண்பர், இளம்பெண் கைது- கள்ளக்காதல் தகராறில் தீர்த்து கட்டினர்

Published On 2018-09-26 10:49 GMT   |   Update On 2018-09-26 10:49 GMT
தூசி அருகே கள்ளகாதல் தகராறில் காஞ்சிபுரம் கட்டிட மேஸ்திரியை கொலை செய்த அவரது நண்பர், இளம்பெண் கைது செய்யப்பட்டனர்.
வெம்பாக்கம்:

காஞ்சீபுரம் மாவட்டம் காரை கிராமம் குட்டை கார தெருவை சேர்ந்தவர் ராஜாராம் (வயது 38). கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி (35). இவர்களுக்கு 1 மகள், 1 மகன் உள்ளனர். ராஜாராம் நேற்று முன்தினம் இரவு வெம்பாக்கம் அருகே பில்லாந்தாங்கல் மெயின்ரோட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

தூசி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ராஜாராமின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

கொலையான ராஜாராமின் செல்போன் மூலம் போலீசார் துப்பு துலக்கினர். அதில் கடைசியாக பேசியது காஞ்சிபுரத்தை சேர்ந்த தமிழ்செல்வி (28) என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தனர்.

அப்போது ராஜாராமின் நண்பர் குமார் (30) என்பவருக்கும் தமிழ்செல்விக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. குமார், தமிழ்செல்வி மூலம் ராஜாராமை வரவழைத்து வெட்டி கொலை செய்ததை கண்டு பிடித்தனர்.

இதையடுத்து குமார், தமிழ்செல்வி இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

கொலையுண்ட ராஜாராம், குமார் இருவரும் ஒன்றாக கட்டிட வேலைக்கு சென்று வந்தனர்.

குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்தது. கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது கள்ளக்காதலி ராஜராராமுடன் தொடர்பில் இருந்தார்.

இதனால் குமாருடன் பேசுவதை தவிர்த்தார். ஆத்திரமடைந்த குமார் ராஜாராமை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.

நேற்று முன்தினம் இரவு குமார் அவரது மற்றொரு கள்ளக்காதலியான தமிழ்செல்வி மூலம் போனில் பேசி ராஜாராமை கீழ்நெல்லி மெயின் ரோட்டில் உள்ள மைதான பகுதிக்கு வரவழைத்தார்.

அங்கு சென்ற ராஜாராமை தயாராக இருந்த குமார் கத்தியால் வெட்டி சாய்த்தார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார்.

போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து குமார், தமிழ்செல்வி இருவரையும் கைது செய்தனர். #tamilnews
Tags:    

Similar News