செய்திகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டுபிரசுரம்

Published On 2018-09-23 16:48 GMT   |   Update On 2018-09-23 16:48 GMT
பெண் குழந்தைகளை சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கீழக்கரை:

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சக திட்டத்தின்கீழ் சைல்டு லைன் அமைப்பு மூலம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பெண் குழந்தைகளை சட்ட விரோத செயல்களில் இருந்து பாதுகாப்பதற்கும், ஆதரவில்லா பெண் குழந்தைகளுக்கு மருத்துவ உதவி, குழந்தை திருமணம் தடுப்பு, இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு திரும்ப செய்வது போன்றவற்றிற்கு பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையொட்டி கீழக்கரை நகரில் ஆட்டோக்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும், துண்டு பிரசுரம் மூலமும் பிரசாரம் செய்தனர். நிகழ்ச்சியில் கீழக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து மீனாட்சி, யமுனா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் ஆகியோர் தலைமையில் துணை மைய இயக்குனர் தேவராஜ், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வின்சென்ட், ஆனந்தராஜ், காஞ்சிரங்குடி கிராம நிர்வாக அலுவலர் பன்னீர் செல்வம், வர்த்தக சங்க தலைவர் சாலிகு, ரோட்டரி சங்க தலைவர் சுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர். 
Tags:    

Similar News